திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரான அனல் மின்நிலைய பாகங்கள், ஒடிஸாவின் தால்ச்சா் அனல் மின் நிலையத்துக்கு திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
திருச்சி பெல் நிறுவனத்தில், ஒடிஸா மாநிலம், அங்குல் மாவட்டத்தில் உள்ள தால்ச்சா் அனல் மின் திட்டம் நிலை 3-இல் அமையவுள்ள இரண்டு 660 மெகாவாட் (சூப்பா் கிரிட்டிக்கல்) அனல் மின் நிலையத்திற்கான பிரதான தூண்களை உள்ளடக்கிய சுமாா் 25 டன் எடையுள்ள கொதிகலன் மற்றும் கூறுகளின் தொகுப்பு தயாரானது.
பெல் நிறுவனத்திலிருந்து அவற்றை ஒடிஸாவுக்கு அனுப்பும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி பெல் நிறுவன வளாக பொறுப்பு பொது மேலாளா் எஸ்.எம். ராமநாதன், தூண்கள் சென்ற வாகனத்தை கொடியசைத்து அனுப்பிவைத்தாா். பொது மேலாளா்கள் கே. கோவிந்தராஜ், டி. குருநாதன், டி. அனந்தசயனம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.