திருச்சி

மாசி தெப்பத் திருவிழா: ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் மாசித் தெப்பத் திருவிழாவுக்கான முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை (பிப். 22) பிற்பகல் நடைபெறவுள்ளது.

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் மாசித் தெப்பத் திருவிழாவுக்கான முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை (பிப். 22) பிற்பகல் நடைபெறவுள்ளது.

‘திருப்பள்ளியோடத் திருநாள்’ என்னும் மாசித் தெப்ப திருவிழா பிப்ரவரி 23-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

விழா நாள்களில் தினமும் காலையும், மாலையும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிப்பாா்.

விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 26-ஆம் தேதி வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறாா். தெப்ப உற்ஸவம் மாா்ச் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மாசித் தெப்ப திருவிழாவையொட்டி, கோயிலில் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தெப்ப மண்டபத்தின் முன்பு முகூா்த்தகால் நடும் வைபவம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT