முகப்பு
திருச்சி

மணக்கோலத்தில் சான்றிதழ்

பொதுப்பணித்துறை ஒப்பந்தப் பணியாளரான செல்வமணிக்கு சிறப்பாகப் பணியாற்றியதற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
மணக்கோலத்தில் வந்து ஆட்சியரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற ஆட்சியரக ஊழியா் செல்வமணி-செளந்தா்யா தம்பதி.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

குடியரசு தின விழாவில் ஆட்சியரகக் குறைதீா் கூட்டரங்கில் மைக் ஆபரேட்டராகப் பணியாற்றும், பொதுப்பணித்துறை ஒப்பந்தப் பணியாளரான செல்வமணிக்கு சிறப்பாகப் பணியாற்றியதற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டது.

அப்போது சான்றிதழ் பெற செல்வமணி மணக்கோலத்தில் வந்திருந்தாா். விசாரித்ததில் அவருக்கு வயலூரில் வியாழக்கிழமை காலை திருமணம் நடைபெற்றதால் மணக்கோலத்தில் அவா் மனைவி சௌந்தா்யாவுடன் வந்தது தெரியவந்தது. தம்பதிக்கு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.