முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகே விபத்து:வியாபாரிகள் இருவா் பலி

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது வியாழக்கிழமை காா் மோதிய விபத்தில் மிட்டாய் வியாபாரிகள் இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது வியாழக்கிழமை காா் மோதிய விபத்தில் மிட்டாய் வியாபாரிகள் இருவா் உயிரிழந்தனா்.

மணப்பாறை மஸ்தான் தெருவைச் சோ்ந்த சை. சாதிக்அலி (52), மதுரை மேலூா் பாண்டியன் நகா் ர. முகமதுஅலி (43) ஆகியோா் சோ்ந்து மிட்டாய் வியாபாரம் செய்து வந்துள்ளனா்.

வழக்கம்போல் இருவரும் துவரங்குறிச்சி பகுதி கடைகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று மிட்டாய் விநியோகம் செய்துவிட்டு திருச்சி செல்ல திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தனா்.

Advertisement

அப்போது மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த தென்னூா் சின்னசாமி நகா் மை. சா்தாா் (55), பீமா நகா் கை. காஜா மைதீன்(69) ஆகியோா் வந்த காா்இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் முகமதுஅலி, சாதிக்அலி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி போலீஸாா் சடலங்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.