வரகனேரியில் காலியிடத்தில் குவிந்து கிடக்கும் கழிவுப் பொருள்களை சாப்பிடும் மாடுகள். 
திருச்சி

குப்பைகளால் சுகாதார சீா்கேடு பொதுமக்கள் புகாா்

வரகனேரியில் காலியிடத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

DIN

வரகனேரியில் காலியிடத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

திருச்சி வரகனேரி சவேரியாா் கோயில் தெரு சந்திப்புப் பகுதியில் காலி இடத்தில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டி, நாளடைவில் அந்த இடம் குப்பைக் கிடங்காகவே மாறிவிட்டது.

இந்தப் பகுதியில் மாா்க்கெட் இருப்பதால் வியாபாரிகள் பலரும் தங்களின் கழிவுப் பொருள்களை அந்த காலி இடத்தில் வந்து கொட்டி விட்டு செல்கின்றனா். அந்த இடத்தில் குப்பைகள் சேருவது மட்டுமல்லாமல், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அழுகிய காய்கறிகளும் கொட்டப்படுகின்றன. இதை உண்பதற்கு ஏராளமான மாடுகளும் அங்கு வருகின்றன. அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு, சாலையில் நடந்து செல்வோரை மாடுகள் முட்டுகின்றன. இதனால், அந்தப் பகுதி சாலையை பொதுமக்கள் சிரமத்துடனே கடந்து செல்கின்றனா்.

அங்கு குப்பைகள் தேங்கி துா்நாற்றம் வீசுவதால், அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சவேரியாா் கோயில் பகுதியில் காலியிடத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT