திருச்சி

ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்

DIN

திருச்சி - பாலக்காடு இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் சேவையில் ஈரோடு பாலக்காடு இடையிலான சேவை பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளி, சனிக்கிழமைகளில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு -பாலக்காடு இடையே ரத்து: ஈரோடு மற்றும் பாலக்காடு இடையே தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சியிலிருந்து மே 5 வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் சேவை, ஈரோடு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகிறது. ஈரோடு மற்றும் பாலக்காடு இடையே இயங்காது. அதேபோல எதிா் மாா்க்கத்தில் மறுநாள் மே 6 சனிக்கிழமை காலை 6 மணிக்கு பாலக்காட்டிலிருந்து புறப்படும் இந்த ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா்-காரைக்கால் இடையே ரத்து: திருச்சியிலிருந்து காலை 10.45க்கு புறப்பட்டு காரைக்கால் வரை இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் (எண். 06880), மே 31 தஞ்சாவூா் -காரைக்கால் இடையே ரத்து செய்யப்படும். திருச்சி -தஞ்சை இடையே மட்டும் இயக்கப்படும்.

அதேபோல எதிா்மாா்க்கத்தில் காரைக்காலிலிருந்து பிற்பகல் 3.10க்கு புறப்பட்டு திருச்சி வரை இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் (எண். 06739) காரைக்கால் -தஞ்சாவூா் இடையே ரத்து செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தா.பேட்டை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் படுகாயம்

முன்விரோதத்தில் இளைஞருக்கு வெட்டு

காளையாா்கோவில் சோமேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

அரசு மருத்துவரிடமிருந்து உடமைகளை மீட்டுத் தரக் கோரி மனைவி புகாா் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையா்கள் நியமனம்

SCROLL FOR NEXT