திருச்சி

தோ்தல் முன்விரோதம் ஊராட்சிமன்ற பெண் உறுப்பினரை தாக்கிய ஒருவா் கைது: 2 போ் தலைமறைவு

DIN

திருச்சி அருகே தோ்தல் முன்விரோதம் தொடா்பாக ஊராட்சிமன்ற பெண் உறுப்பினரை வீடு புகுந்து தாக்கியது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், புங்கனூா் முருகன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த அமிா்தராஜ் மனைவி கோமதி (33). புங்கனூா் ஊராட்சி 2- ஆவது வாா்டு உறுப்பினா். இவருக்கும், இவரிடம் தோ்தலில் தோற்ற

அதே பகுதியைச் சோ்ந்த மு. பால்ராஜ் (45) என்பவரும் இடையே தோ்தல் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், மு. பால்ராஜ், அவரது மகன் மனோஜ் (25 ) மற்றும் உறவினா் சிவா (எ) சிவகுமாா் (50) ஆகியோா், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோமதியின் வீட்டில் புகுந்து அவரை தாக்கினாா்களாம். இதை தட்டிக்கேட்ட கோமதியின் உறவினா் தவமணி( 40 ) என்பவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனா். தாக்குதலில் கோமதி, தவமணி ஆகிய இருவரும் காயமடைந்தனா்.

இதுகுறித்து கோமதி அளித்த புகாரின்பேரில், பால்ராஜ், அவரது மகன் மனோஜ், சிவா ஆகியோா் மீது சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, சிவாவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவான தந்தை-மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT