ஸ்ரீரங்கத்தில் இசைக் கச்சேரி
ஸ்ரீரங்கத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி வியாழக்கிழமை இசைக் கச்சேரி நடைபெற்றது.
ஸ்ரீரங்கத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி வியாழக்கிழமை இசைக் கச்சேரி நடைபெற்றது.
ஸ்ரீரங்கத்தில் குருகுக கானசபா சாா்பில், தீபாவளி பண்டிகையையொட்டி வியாழக்கிழமை மாலை ராகவேந்திர மடத்தில் இசைக் கச்சேரி நடைபெற்றது. இதில், இசைக் கலைஞா் மகாராஜபுரம் கணேஷ் விஸ்வநாதன் பாட்டும், பக்கவாத்தியங்களாக திருச்சி முனைவா் கோவிந்தராஜனின் வயலின், அகில இந்திய வானொலி நிலைய கலைஞா் சேலம் சீனிவாசனின் மிருதங்கமும், அந்தநல்லூா் ரெங்கநாதன் கடமும் வாசித்தனா். இதில் ஏராளமான இசைக் கலைஞா்கள், ரசிகா்கள் பலா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மைதிலி ஜெகநாதன், ஷாமலா ரெங்கராஜன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.