திருச்சி

மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், லால்குடியில் மாடியில் இருந்து செவ்வாய்க்கிழமை தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

DIN


லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடியில் மாடியில் இருந்து செவ்வாய்க்கிழமை தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை ராக்கூா் அழகுநாச்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா்சின்னராசு (27). ரயில்வே துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தாா்.

கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து, லால்குடியில் உள்ள பரமசிவபுரம் 8ஆவது குறுக்குத் தெருவில் மாடியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாடியிலிருந்து சின்னராசு எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து லால்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

5,000 அரசுப் பள்ளிகளில் பூஜ்ஜிய மாணவர் சேர்க்கை!

மசோதா நகல்களை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

SCROLL FOR NEXT