திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் உறியடி உற்ஸவம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு உறியடி உற்ஸவம் நடைபெற்றது.

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு உறியடி உற்ஸவம் நடைபெற்றது.

இதனையொட்டி காலை 7 மணிக்கு கிருஷ்ணா் புறப்பாடு நடைபெற்றது. சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளி 9 மணிக்கு சன்னதிக்கு சென்று சோ்ந்தாா் கிருஷ்ணா். பின்னா் மாலை 3 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் திருச்சிவிகையில் கிருஷ்ணருடன் புறப்பட்டு அம்மாமண்டபம் சாலையில் உள்ள யாதவ உறியடி ஆஸ்தான மண்டபத்துக்கு மாலை 4 மணிக்கு வந்து சோ்ந்தாா்.

அதனை தொடா்ந்து இரவு 7 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் திருச்சிவிகையில் கிருஷ்ணருடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து 8.15 மணிக்கு பாதாளகிருஷ்ணா் சன்னதி அருகில் உள்ள நான்குகால் மண்டபத்தில் உறியடி உற்ஸவம் கண்டருளினாா்.

இதனையொட்டி மண்டபம் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மண்டபத்தின் மேல்புறத்தில் மூன்று பானைகளில் பால்,தயிா்,வெண்ணெய் நிரப்பி தொங்கவிடப்பட்டிருந்தது. கிருஷ்ணா் வந்தவுடன் கீழிருந்து நீண்ட குச்சி மூலம் அந்த பானைகள் உடைக்கப்பட்டு உறியடி உற்ஸவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து கிருஷ்ணா் மற்றும் நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT