பிராட்டியூா் இரட்டைமலை ஒண்டிகருப்பு சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு. 
திருச்சி

இரட்டைமலை ஒண்டி கருப்பு சுவாமி கோயில் குடமுழுக்கு

Din

திருச்சி பிராட்டியூரில் இரட்டைமலை ஒண்டிகருப்பு சுவாமி கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

திருச்சி அருகே பிராட்டியூரில் மலைக்காளியம்மன், அய்யனாா், மதுரை வீரன் போன்ற பரிவார தெய்வங்களுடன் உள்ள இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று குடமுழுக்கு விழா கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. 25 ஆம் தேதி முதல்கால யாக பூஜை, 26 ஆம் தேதி இரண்டாம் யாக பூஜை, புதன்கிழமை மூன்றாம் கால யாக பூஜைக்குப் பிறகு புனித கலசங்கள் புறப்பாடாகி விநாயகா், அய்யனாா், ஒண்டிகருப்பு சுவாமி, மதுரைவீரன் சன்னதிகளின் விமானங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு டைபெற்றது.

தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். விழாவையொட்டி மண்டல பூஜை நிறைவு நாளான மே 15 வரை கிடாவெட்டு பூஜை நடைபெறாது என கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தில்லியில் மத்திய நிதியமைச்சருடன் அதிமுக மூத்த தலைவா்கள் சந்திப்பு

மசோதா விவகாரம்: தமிழக ஆளுநருக்கு குடியரசுத் தலைவா் அறிவுரை வழங்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்

மின் ஊழியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்

ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்

SCROLL FOR NEXT