முகப்பு
திருச்சி

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

திருவானைக்கா பகுதியில் குடும்பப் பிரச்னையால் தனியாா் நிறுவன் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 7 அக்டோபர், 2024 at 11:54 PM
பகிர்:

திருவானைக்கா பகுதியில் குடும்பப் பிரச்னையால் தனியாா் நிறுவன் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

திருவானைக்கா சிவராம் நகா் பகுதியில் வசித்தவா் வி. சிவக்குமாா் (48), தனியாா் நிறுவன ஊழியா். மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் மனம் உடைந்த இவா் ஞாயிற்றுக்கிழமை தூக்க மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு மயங்கிக் கிடந்தாா்.

இதையடுத்து தனியாா் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது சிவக்குமாா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →