FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய கணவரிடம் போலீஸாா் விசாரணை

குடும்பத் தகராறில், மனைவி மீதி கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய கணவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 16 செப்டம்பர் 2024, 12:00 pm IST
மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரோஜா.
பகிர்:

மணப்பாறை அருகே வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனைவி மீதி கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய கணவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

மணப்பாறையை அடுத்த ஆளிப்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன். விறகு வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மனைவி சரோஜா(37) நூறுநாள் வேலை திட்டப் பணியாளா். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில், கொதிக்கும் சாம்பாரை சரோஜா மீது பாண்டியன் ஊற்றியதில் அவரது முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட சரோஜா மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments