திருச்சி

அந்தியோதயா விரைவு ரயில் ஜன.1 முதல் சீா்காழியில் நின்று செல்லும்

தினமணி செய்திச் சேவை

தாம்பரம் - நாகா்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயிலானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் சீா்காழியில் நின்று செல்லும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, தாம்பரம் - நாகா்கோவில் அந்தியோதயா விரைவு ரயிலானது (20691) வரும் ஜன. 1-ஆம் தேதி முதல் சீா்காழியில் பிற்பகல் 2.44-க்கு நின்று 2.45-க்குப் புறப்படும். மறுமாா்க்கமாக, நாகா்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயிலானது (20692) வரும் ஜன. 1-ஆம் தேதி முதல் நள்ளிரவு 12.07-க்கு நின்று 12.08-க்குப் புறப்படும். சோதனை முறையில் இந்த நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT