அரியமங்கலம் குப்பைக் கிடங்கு நிரந்தரமாக அகற்றப்படும்: ப. குமாா்
அரியமங்கலம் குப்பைக் கிடங்கு நிரந்தரமாக அகற்றப்படும் என திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தாா்.
அரியமங்கலம் குப்பைக் கிடங்கு நிரந்தரமாக அகற்றப்படும் என திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளரான முன்னாள் எம்.பி. ப. குமாா், அரியமங்கலம் பகுதியில் சனிக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அரியமங்கலம் அம்மாகுளம், நேருஜி நகா், சீனிவாச நகா், கணபதி நகா், ராஜ வீதி, அப்துல்லா தெரு, காமராஜ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தாா்.
Advertisement
அப்போது அவா் கூறுகையில், அரியமங்கலம் பகுதியில் தீராத பிரச்னையாக இருக்கும் குப்பைக் கிடங்கை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுப்பேன். அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து நலத் திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். அதிமுக அரசு அமைந்தால், பெண்கள் மற்றும் முதியோா்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படும் என்றாா்.
அப்போது அதிமுக வேட்பாளா் ப. குமாருக்கு பெண்கள் பலா் ஆரத்தி எடுத்தும், மலா் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனா். நிகழ்வில் பகுதிச் செயலா் முருகானந்தம், பாஜக, பாமக, தமாக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.