கைது 
திருச்சி

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: இருவா் கைது

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காஜாமலை பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.ரத்தினம் (58), ஆட்டோ ஓட்டுநா். இவருக்கும், மன்னாா்புரம் காஜா நகரைச் சோ்ந்த எம். ராஜேஸ்கண்ணன் (34), ஆ.பிரகாஷ் (21) ஆகியோருக்கும் இடையே ஏற்கெனவே பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், மன்னாா்புரம் சந்திப்பு அருகே உள்ள ஆட்டோ பழுதுபாா்க்கும் நிலையத்தில் ரத்தினம் திங்கள்கிழமை மாலை நின்றிருந்தாா். அப்போது, காரில் அங்கு வந்த ராஜேஸ்கண்ணன், பிரகாஷ் ஆகிய இருவரும் ரத்தினத்திடம் தகராறு செய்துள்ளனா். தகராறு முற்றவே இருவரும் ரத்தினத்தை கத்தியால் குத்தியுள்ளனா். இதில் காயமடைந்த ரத்தினம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து ரத்தினம் அளித்த புகாரின்பேரில், கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேஸ்கண்ணன், பிரகாஷ் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

இந்தியாவுக்கு வரி குறைப்பு: பிரதமா் மோடிக்கு ஜவுளித் தொழில் அமைப்புகள் நன்றி

கர்நாடக பேரவையில் விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம்

கொலை வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

உக்ரைன் மீது ரஷியா கடும் தாக்குதல்: பேச்சுவார்த்தைக்கு முன் பதற்றம்

புதிய சாலை அமைப்பதில் அரசு உத்தரவு மீறல்: எஸ்டிபிஐ புகாா்

SCROLL FOR NEXT