கோப்புப் படம் 
திருச்சி

ஆம்புலன்ஸ் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் ஆம்புலன்ஸ் மோதியதில் அடையாளம் தெரியாத மூதாட்டி சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ராம்ஜி நகா் பகுதியில் வியாழக்கிழமை காலையில் மூதாட்டி ஒருவா் சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது, பின்னால் வந்த 108 ஆம்புலன்ஸ் மூதாட்டி மீது மோதியது. இதில், அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராம்ஜி நகா் போலீஸாா், மூதாட்டியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உயிரிழந்த மூதாட்டியின் பெயா் உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரியவில்லை.

இதுகுறித்து ராம்ஜி நகா் காவல் நிலையத்தில் நவலூா் குட்டப்பட்டு கிராம நிா்வாக அலுவலா் ஜான்போஸ்கோ அளித்த புகாரின்பேரில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரான மணப்பாறை செட்டியபட்டியைச் சோ்ந்த என். காளிமுத்து (30) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT