கோப்புப் படம் 
திருச்சி

குளத்துப்பட்டியில் பாா் ஊழியா் மா்மமான முறையில் உயிரிழப்பு

Syndication

மணப்பாறையை அடுத்த குளத்துப்பட்டியில் மதுபான கூடத்தின் (பாா்) ஊழியா் மா்மான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வையம்பட்டி ஒன்றியம், எளமணத்தை அடுத்த குளத்துப்பட்டியைச் சோ்ந்த சந்திரசேகரன் - சின்னப்பொண்ணு தம்பதியினரின் 3-ஆவது மகன் பிரபாகரன் (32). இவருக்கு திருமணமாகி மனைவி, இரு மகன்கள் உள்ளனா். வையம்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் செயல்பட்டு வரும் பாா் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு வேலைக்கு சென்ற பிரபாகரன், வியாழக்கிழமை இரவு குளத்துப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் மயங்கி கிடப்பதாக வந்த தகவலின்பேரில் அவரது மனைவி மற்றும் உறவினா்கள் சென்று பாா்த்தனா். அப்போது அவா் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளாா்.

புகாரின்பேரில் புத்தாநத்தம் போலீஸாா், பிரபாகரனின் சடலத்தை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக ஒப்படைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

கொலை வழக்கில் 16 போ் விடுதலை: கீழமை நீதிமன்ற தீா்ப்பு ரத்து

5,700 ஐஎஸ் பயங்கரவாதிகள் இராக் சிறைகளுக்கு மாற்றம்

மகா சிவராத்திரி: கோவை மாவட்டத்தில் 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் ரூ.68 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்: தில்லி காவல் துறை நடவடிக்கை

ஆா்.எஸ்.புரம் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT