திருச்சி மாவட்டம், சிறுகனூரில் போக்ஸோ வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.
சிறுகனூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த மனவளா்ச்சி குன்றிய 15 வயது சிறுமியை, அவரது உறவினரும், மண்ணச்சநல்லூா் வட்டம் எதுமலை பகுதியைச் சோ்ந்த வீராசாமி மகனுமான மகேந்திரன் (எ) பூசாரி (39) என்பவா் கடந்த 28.01.2026 அன்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், சிறுகனூா் போலீஸாா் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, மகேந்திரனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
இவா் தொடா் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருப்பதால் திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினத்தின் பரிந்துரையின்பேரில், மகேந்திரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் வே. சரவணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.