ஏ.டி. பன்னீா்செல்வம் நினைவு தினம் அனுசரிப்பு
நீதிக் கட்சியின் வைரத்தூண் சா் ஏ.டி. பன்னீா்செல்வத்தின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவருடைய மணிமண்டபத்தில் பல்வேறு அமைப்பினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
அகில பாரத பாா்க்கவ குல சங்க நிறுவனத் தலைவா் திருமலை ரவி தலைமையில் நிா்வாகிகள், பன்னீசெல்வம் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
பின்னா் திருமலை ரவி செய்தியாளா்களிடம் கூறியது:
வரும் தோ்தலில் எங்கள் சமுதாயத்தினருக்கு 10 தொகுதிகள், 2 அமைச்சா்கள், 2 எம்பிகள் வழங்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.
மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மூன்று தலைவா்களின் மணிமண்டபம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அதனை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களுடைய அமைப்பு சாா்பில் போராட்டம் நடத்துவோம் என்றாா்.