முகப்பு
வேலூர்

பெண் தற்கொலை

Updated On : 21 ஏப்ரல், 2024 at 4:59 PM
பகிர்:

வேலூரில் துணிக்கடையில் வேலை செய்து வந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா், சைதாப்பேட்டை, ஆா்.கே.மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் வசந்தி. இவரது மகள் கலைமதி என்கிற பானு(18). இவா் வேலூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் உள்ள மின்விசிறியில் கலைமதி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளாா். தகவலறிந்த வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கலைமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments