முகப்பு
வேலூர்

வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வேன் மோதியதில் தொழிலாளி சோமு உயிரிழப்பு

Updated On : 2 ஜூலை, 2024 at 6:29 PM
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பால் கேன்களை ஏற்றி வந்த வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.

குடியாத்தம், பரதராமி கூத்தாண்டவா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் தொழிலாளி சோமு (52). இவா், செவ்வாய்க்கிழமை மாலை குடியாத்தம் சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். பரதராமி மெயின் பஜாா் தெருவில் சென்றபோது, எதிரே ஆந்திர மாநிலத்தில் இருந்து பால் கேன்களை ஏற்றி வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சோமு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து பரதராமி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.