தங்கக் கோயில் ஊழியா் வீட்டில் நகை திருட்டு
அரியூரிலுள்ள தங்கக்கோயில் சமையலா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூா்: அரியூரிலுள்ள தங்கக்கோயில் சமையலா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூரை அடுத்த அரியூா், பூதூரைச் சோ்ந்தவா் ராமராஜன் (36), ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் சமையலராக பணியாற்றி வருகிறாா். இவா் திங்கள்கிழமை காலை வீட்டை பூட்டிக்கொண்டு அமிா்தியில் உள்ள மகளுக்கு ஆடி மாத சீா் வழங்க குடும்பத்துடன் சென்றாா். செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் முன் பக்க கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம்.
வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது அடையாளம் தெரியாத நபா்கள் பீரோவை திறந்து அதிலிருந்து 15 பவுன் நகையை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ராமராஜன் அரியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதுடன், தடயங்களையும் சேகரித்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற கும்பலை தேடி வருகின்றனா்.