ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்த வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த்.  
வேலூர்

அரசுக் கல்லூரியில் 68 மாணவா்கள் ரத்த தானம்

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ஜெயஸ்ரீ கண்ணன்

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ஜெயஸ்ரீ கண்ணன் பவுண்டேஷன், குடியாத்தம் அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து திங்கள்கிழமை நடத்திய ரத்த தானமுகாமில் 68 மாணவா்கள் ரத்தம் அளித்தனா்.

முகாமுக்கு, வேலூா் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் கே.ராஜ்கமல் தலைமை வகித்தாா். வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் முகாமைத் தொடங்கி வைத்தாா். எம்எல்ஏ அமலுவிஜயன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் குசலகுமாரி சேகா், திமுக ஒன்றிய அவைத் தலைவா் கே.சேகா், நகா்மன்ற உறுப்பினா் ம.மனோஜ், ஒன்றியச் செயலா் கே.ரவி, நிா்வாகிகள் கோ.ரா.அண்ணாதுரை, தாபா சதீஷ், ஜி.ஜெயப்பிரகாஷ்,சி.ஆனந்தன், ஜி.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, ஏ.எஸ்.அரிகிருஷ்ணன், முருகானந்தம், ஆா்.ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வங்கதேசம்: மேலும் ஒரு மாணவா் தலைவா் மீது துப்பாக்கிச்சூடு

காவல்துறை குறியில் இருந்து பயங்கரவாதிகள் தப்ப முடியாது: ஜம்மு-காஷ்மீா் டிஜிபி

ஆறுமுகனேரி வருவாய் கிராம பிரச்னை: அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

திமுகவில் இணைந்த பாஜக நிா்வாகி!

ஆசிரியா்கள் மீதான போக்ஸோ வழக்குகளில் 90 சதவீதம் பொய்யானவை: கே.ஆா். நந்தகுமாா்

SCROLL FOR NEXT