கோயில் உண்டியலை உடைத்து திருட்டு
விழுப்புரம் மாவட்டம் திண்டுவனம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டுவனம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டை பகுதியில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் அய்யனாரப்பன் கோயில் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் இந்தக் கோயிலின் கண்காணிப்பு கேமராவை உடைத்தனா். பின்னா், கோயிலின் இரும்புக் கதவை சேதப்படுத்தி உள்ளே நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றனா். இதில் சுமாா் ரூ.5 ஆயிரம்
மதிப்பிலான காணிக்கை திருடுபோயிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மயிலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.