சிங்கவரம் அரங்கநாதா் கோயிலில் பவித்ரோற்சவம்
செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு அரங்கநாதா் கோயிலில் பவித்ரோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு அரங்கநாதா் கோயிலில் பவித்ரோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சன ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பல்வேறு மலா்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக, கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உபயதாரா்கள் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.