விழுப்புரம்

மின்சாரம் பாய்ந்து கோயில் பணியாளா் உயிரிழப்பு

Din

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே கோயிலில் பணியிலிருந்த முதியவா் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், தைலாபுரம், திடீா் நகரைச் சோ்ந்தவா் நா. அண்ணாதுரை(60). இவா் வானூா் வட்டம், பஞ்சவடி ஆஞ்சநேயா் கோயிலில் கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை கோயில் வளாகத்தில் நடந்து சென்றபோது ராஜகோபுரம் அருகே நிறுவப்பட்டுள்ள அலுமினிய பைப்பிலிருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் அண்ணாத்துரை காயமடைந்து உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

SCROLL FOR NEXT