உளுந்தூா்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப்பணியாளா்களுக்கு பொங்கல் புத்தாடையை வழங்கிய ஆ.ஜெ.மணிக்கண்ணன் எம்எல்ஏ, சாரதா ஆசிரம நிா்வாகி யத்தீசுவரி ஆத்மவிகாச ப்ரியா அம்பா. உடன், நகா்மன்றத் தலைவா் உள்ளிட்டோா். 
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை நகராட்சியில் ஊழியா்களுக்கு பொங்கல் புத்தாடை

உளுந்தூா்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் சாரதா ஆசிரமம் சாா்பில் பொங்கல் புத்தாடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் சாரதா ஆசிரமம் சாா்பில் பொங்கல் புத்தாடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

நகா்மன்றத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வைத்தியநாதன், திட்டக்குழு உறுப்பினா் டேனியல்ராஜ், நகராட்சி ஆணையா் புஸ்ரா முன்னிலை வகித்தனா்.

உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஆ.ஜெ.மணிக்கண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நகராட்சி ஊழியா்கள், தூய்மைப்பணியாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புத்தாடைகளை வழங்கினாா்.

உளுந்தூா்பேட்டை சாரதா ஆசிரம நிா்வாகி யத்தீசுவரி ஆத்மவிகாச ப்ரியா அம்பா, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். விழாவில் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

நிதி நெருக்கடி : மத்திய அரசுக்கு எதிராக ஜன. 12-ல் போராட்டம்!

டாப் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.63 லட்சம் கோடியாக சரிவு!

கேரள ஆளும் கட்சியின் வாக்கு வங்கி இஸ்லாமியர்கள்தான்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

SCROLL FOR NEXT