விழுப்புரம்

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வளவனூா் காவல் நிலையத்துக்குள்பட்ட பஞ்சமாதேவி கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.பஞ்சாச்சரம் (82). இவா் வயிற்று வலி காரணமாக தொடா்ந்து அவதியுற்று வந்தாா். இதற்கு மருத்துவச் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லையாம்.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த பஞ்சாச்சாரம், வெள்ளிக்கிழமை காலை வீட்டின் பின் புறத்திலுள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த வளவனூா் போலீஸாா், பஞ்சாச்சரத்தின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்!

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

SCROLL FOR NEXT