கடலூர்

சிதம்பரம் காய்கறி சந்தையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினமணி

சிதம்பரம் நகராட்சி காய்கறி சந்தையில் ஆக்கிரமிப்புகள் காவல் துறையினரால் அகற்றப்பட்டன.
 சிதம்பரம் மேலரத வீதியில் நகராட்சி காய்கறி பெரிய மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
 இந்த நிலையில், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் கே.அம்பேத்கர் தலைமையிலான போலீஸார் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இதனால் தற்போது காய்கறி மார்க்கெட் விசாலமாக காட்சியளிக்கிறது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT