முகப்பு
கடலூர்

விபத்தில்லாமல் வாகனம் ஓட்டியவருக்கு தங்கப் பதக்கம்

கடலூரில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர், விபத்தில்லாமல் வாகனம் ஓட்டியதற்காக தமிழக அரசின் தங்கப் பதக்கம் பெற்றார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

கடலூரில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர், விபத்தில்லாமல் வாகனம் ஓட்டியதற்காக தமிழக அரசின் தங்கப் பதக்கம் பெற்றார்.
கடலூர் மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகத்தில் திரைப்படக் கருவி இயக்குபவராகப் பணிபுரிபவர் ந.முருகன். இவர் ஊர்தி ஓட்டுநர் பணியில் 1987-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை பணியாற்றிய காலத்தில், எந்தவித விபத்தின்றி வாகனத்தை ஓட்டியதற்காக தமிழக அரசால் வழங்கப்படும் தங்கப் பதக்கத்தைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக 4 கிராம் கொண்ட தங்கப் பதக்கமும் மேலும், 25 ஆண்டுகாலம் அப்பழுக்கற்ற முறையில் பணியை நிறைவு செய்தமைக்கு ஊக்கத் தொகையாக ரூ.2 ஆயிரமும் அரசால் வழங்கப்பட்டது. இந்த வெகுமதிகளை கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் திங்கள்கிழமை வழங்கினார் (படம்).
நிகழ்ச்சியில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலக கணக்கர் ல.ஆனந்தகிருஷ்ணன், தட்டச்சர் சே.சிவகுரு, தொழில்நுட்ப உதவியாளர் து.பாலாஜி, மின் உதவியாளர் ந.ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →