முகப்பு
கடலூர்

காவிரி விவகாரம்: டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, கடலூரில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 15 மே, 2018 at 4:35 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, கடலூரில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மண்டலம் வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறுமென தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடலூரில் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கு.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கே.வெற்றிவேல், அமைப்புச் செயலர் டி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கோ.சீனுவாசன், சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஏ.அரிகிருஷ்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசினர்.
சங்க நிர்வாகிகள் எஸ்.டி.கருணாகரன், ஏ.முத்துகுமரன், ஜி.இளங்கோ, டி.ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி முழக்
கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.