கடலூர்

லாரி மோதியதில் மாணவர் சாவு 

தினமணி

லாரி மோதியதில் மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
 திட்டக்குடி அருகே உள்ள கீழ்செருவாய் பகுதியைச் சேர்ந்த சேரவேந்தன் மகன் முருகானந்தம் (21). பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வியியல் முதலாமாண்டு படித்து வந்தார். வியாழக்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த கனகசபை மகன் செந்தில்ராஜா (22) என்பவருடன் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தார்.
 திட்டக்குடி-தொழுதூர் சாலையில் தி.இளமங்கலம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், முருகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 காயமடைந்த செந்தில்ராஜா திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, அவரது சகோதரர் சே.தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் திட்டிக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தூத்துக்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மு.ராஜி (42) என்பவரை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT