கடலூர்

திமுக சார்பில் மருத்துவ முகாம்

DIN

சிதம்பரம் நகர திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம், நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 கட்சியின் நகரச் செயலர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தார் (படம்). முகாமில் மருத்துவர்கள் கடலூர் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் கமலகண்ணன்,  மாவட்ட மருத்துவரணி துணை அமைப்பாளர்கள் ஜி.கார்த்திகேயன், கிருஷ்ணராஜ், சித்தார்த், ஹமீது, கலிபா, ஆனந்தகுமார், கார்த்திக் ஆகியோர் பங்கேற்று சிறுவர்கள் உள்பட மொத்தம் 237 பயனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து இலவச மருந்து, மாத்திரைகளை வழங்கினர். பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் தென்னவன் எஸ்.கே.ஆறுமுகம், புவனகிரி ஒன்றியச் செயலர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ச.ஜேம்ஸ் விஜயராகவன், ராஜேந்திரகுமார், மாவட்ட பிரதிநிதிகள் ரா.வெங்கடேசன், வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நகர துணைச் செயலர்கள் சி.பன்னீர்செல்வம், பா.பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அப்பு சத்தியநாராயணன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு.சந்திரசேகரன், 
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் வி.பி.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT