உடல் தானம்
காட்டுமன்னார்கோவில் பெரியார் நகரைச் சேர்ந்த தில்லைநாயகி (76) அண்மையில் காலமானார். இவரது உடல், கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் பெரியார் நகரைச் சேர்ந்த தில்லைநாயகி (76) அண்மையில் காலமானார். இவரது உடல், கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டது. உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், நிர்வாகி மோகன் உள்ளிட்டோர் செய்தனர்.