முகப்பு
கடலூர்

கார் மோதியதில் 2 பெண்கள் சாவு

கடலூரில் கார் மோதியதில் இரண்டு பெண்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனர்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:56 AM
பகிர்:

கடலூரில் கார் மோதியதில் இரண்டு பெண்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனர்.
 கடலூர் ஆல்பேட்டை பகுதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு, கடலூர் அருகே உள்ள உச்சிமேட்டைச் சேர்ந்த மாதவன் மனைவி தேவசேனா (40), வானமாதேவியைச் சேர்ந்த பாப்பாத்தி (45) ஆகியோர் துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு பணிமுடிந்து, வீட்டுக்குச் செல்வதற்காக புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலை வழியாக நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.
 அப்போது, அந்த வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு பெண்கள் மீதும் மோதியது.
 இந்த விபத்தில், தேவசேனா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமுற்ற பாப்பாத்தி, கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவரும் உயிரிழந்தார்.
 விபத்து குறித்து கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.