கிருஷ்ண ஜயந்தி விழா
கடலூர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் சிதம்பரம் தெற்கு ரத வீதியில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
கடலூர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் சிதம்பரம் தெற்கு ரத வீதியில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
அமைப்பின் மாவட்டச் செயலர் ஜோதி.குருவாயூரப்பன் தலைமை வகித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். மாவட்ட சேவைப் பிரிவு ஜெயமுரளி கோபிநாத் சிறப்புரையாற்றினார். விழாவில் பஜ்ரங்தள் நிர்வாகி குருமூர்த்தி, அருள், முத்து, கார்த்திக், திருவாடுதுறை மடத்தின் ஆய்வாளர் செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன், சஞ்சீவி, சிவமணிபத்தர், ஆடுர் கலையரசன், கண்ணங்குடி பாண்டியன், தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரச் செயலர் அருள் நன்றி கூறினார்.