கடலூர்

குற்றத் தடுப்பு விழிப்புணர்வு

DIN

பதிவு பெறாத நிதி நிறுவனம், ஏலச் சீட்டு நிறுவனங்களில் பணம் செலுத்தி மக்கள் ஏமாறுவதை தடுக்கும் வகையில், கடலூர் மாவட்ட பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வடலூர் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
 ஆய்வாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பதிவு செய்யாத நிதி நிறுவனங்கள், ஏலச்சீட்டு, சிறு சேமிப்பு நிறுவனங்களால் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்வில், குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் சித்ரா, லட்சுமி, மணிமொழி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT