கடலூர்

விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் மே 15 -ஆம் தேதி கலந்தாய்வு

DIN

விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் மே 15 -ஆம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கான சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள அரசுக் கலைக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விருத்தாசலத்தில் உள்ள திரு கொளஞ்சியப்பர் அரசுக் கலைக் கல்லூரியில் கடந்த 22 -ஆம் தேதி விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கியது. மே 6 -ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது.
 இந்த நிலையில், மே 15- ஆம் தேதி முதல் கட்டக் கலந்தாய்வு நடைபெறுவதாக கல்லூரி முதல்வர் க.வேலு தெரிவித்தார். முதலில் விளையாட்டு, தேசிய மாணவர் படை, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறும். மே16 - 17 ஆம் தேதிகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், மே 20 -ஆம் தேதி பி.காம்., பி.பி.ஏ., பாடங்களுக்கும், 21 -ஆம் தேதி பி.ஏ., (ஆங்கிலம்), 22 -ஆம் தேதி பி.ஏ., (தமிழ்) மே 24, 27- ஆம் தேதிகளில் பி.ஏ., (வரலாறு, பொருளியல்) பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
 எனவே, விண்ணப்பித்த மாணவர்கள் கலந்தாய்வுக்கு குறிப்பிட்ட நாளில் பங்கேற்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர் க.வேலு நதெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT