கடலூர்

ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகம் முற்றுகை

DIN

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி விருத்தாசலத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். 

திட்டக்குடி வட்டம், போத்திரமங்கலம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் இனத்தவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக குடியிருக்க போதுமான இடமின்றி, ஒரே வீட்டில் 8 முதல்10 பேர் வரை வசித்து வருகின்றனராம். எனவே, ஆதிதிராவிடர் நலத் துறையின் மூலம் அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். 

இதனால் சம்பந்தப்பட்ட ஆதிதிராவிட நலத் துறையை கண்டித்து விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருத்தனர். அதன்படி திங்கள்கிழமை விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகம் முன் கிராமமக்கள் திரண்டனர். ஆனால், அலுவலகத்தில் சார்-ஆட்சியர் இல்லாததால் அவரது நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். பின்னர், விருத்தாசலம் ஆதிதிராவிடர் நலத் துறை வட்டாட்சியரிடம் மனு அளிக்க சென்றனர். அங்கும் வட்டாட்சியர் இல்லாததால் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT