பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி இந்து மக்கள் கட்சியினர் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.தேவா தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சத்தியராஜ், அண்ணாவியார் ஒன்றியச் செயலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பண்ருட்டி நகர அமைப்பாளர் அன்பு வரவேற்றார். மாவட்ட இளைஞரணி பொருளாளர் பாலசந்தர், புதுவை மாநிலத் தலைவர் மஞ்சினி ஆகியோர்கண்டன உரை நிகழ்த்தினர். விழுப்புரம் மாவட்டச் செயலர் ராமநாதன், நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, புருஷோத்தமன், கார்த்தி, லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விவேகானந்தர் பிறந்த நாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.