கடலூர்

வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

கடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியன்  வங்கி ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.முருகேசன் தலைமை வகித்தார். வங்கி ஓய்வூதியர்கள் சங்க கெளரவத் தலைவர் கே.திருமலை முன்னிலை வகித்தார். இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உதவிச் செயலர் ஆர்.குருபிரசாத், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.மீரா, எஸ்.ராஜேந்திரன், உதவித் தலைவர் ஆர்.கலியபெருமாள் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்தியன் வங்கியில் போதுமான ஊழியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். ஊழியர்கள் பணியட மாறுதல்களை ஒப்பந்த கண்ணியத்தை மீறாமல் செயல்படுத்த வேண்டும். தற்காலிகப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT