கடலூர்

ஜாக்டோ-ஜியோ தொடர் போராட்டம்: பள்ளிகள் முடக்கம்

தினமணி

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சுமார் 26 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. ஆனால், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 90 சதவீதம் பேர் பணிக்குச் செல்லாததால், கடந்த 4 நாள்களாக பள்ளிகள் முடங்கியுள்ளன.
 இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது. இந்தப் போராட்டம் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது.
 மறியலில் ஈடுட்ட 2,500 பேர் கைது: போராட்டத்தின் 4-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான மறியல் போராட்டம் கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்றது. அப்போது, கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.அரிகிருஷ்ணன் தலைமையில் திரளான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், மறியலில் ஈடுபட்ட 1,300 பெண்கள் உள்பட 2,500 பேரை கைதுசெய்து கடலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் காவலில் வைத்தனர்.
 தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கடலூர் மாவட்டத்தில் சுமார் 26 சதவீதம் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. அதே நேரத்தில், தொடக்கப் பள்ளிகள் அளவில் சுமார் 90 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்குச் செல்லாததால் கடந்த 4 நாள்களாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
 7 பேர் மீண்டும் கைது: கைதான அனைவரும் இரவு 7 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், மண்டபத்திலிருந்து வெளியேறியவர்களில் ஜாக்டோ - ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் பெருஞ்சித்தரனார், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் ஆர்.பாலசுப்பிரமணியன், பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த சாஸ்தா, ரட்சநாதன், அறிவழகன், தாமோதரன் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் மீண்டும் கைதுசெய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT