கடலூர்

பைக்குகள் மோதல்: விவசாயி சாவு

DIN

மந்தாரக்குப்பம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் விவசாயி புதன்கிழமை உயிரிழந்தார்.
 குறிஞ்சிப்பாடி வட்டம், கல்குணம், டி.வி.நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (46). இவரது தம்பி செல்வக்குமார் (40), விவசாயி. இவர் புதன்கிழமை தனது மனைவியை பைக்கில் அழைத்துக்கொண்டு பெரியாகுறிச்சியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார். பின்னர் பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
 காமராஜ் நகர் அருகே சென்றபோது இவரது பைக், எதிரே வந்த பைக்குடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் செல்வக்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கடாஜலபதி அளித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT