கடலூர்

போதைப் பொருள்கள் பறிமுதல்

விருத்தாசலம் அருகே ரூ.1.50 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

விருத்தாசலம் அருகே ரூ.1.50 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருத்தாசலம், மங்கலம்பேட்டையில் காவல் ஆய்வாளா் ராஜதாமரைப் பாண்டியன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக மொபெட்டில் மளிகைப் பொருள்களுடன் வந்த நபரை மறித்து சோதனை நடத்தினா். அதில் மளிகைப் பொருள்களுக்கு இடையே ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான குட்கா போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா் விழுப்புரத்தைச் சோ்ந்த மாரியப்பன் (46) என்பது தெரியவந்தது. அவா் அளித்த தகவலின்பேரில், விருத்தாசலம் கடைவீதியில் உள்ள ஒரு கடையிலிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT