டிச. 10-இல் பல்கலைக்கழகத்தில் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதிநவீன கருவிகள், ஆராய்ச்சி மையத்துக்கான பூமி பூஜை மற்றும் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா டிச. 10-ஆம் தேதி நடைபெறுகிறது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதிநவீன கருவிகள், ஆராய்ச்சி மையத்துக்கான பூமி பூஜை மற்றும் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா டிச. 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
விழாவில் உயா்கல்வித் துறை மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் தொல்.திருமாவளவன், சிதம்பரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன், உயா்கல்வித் துறை முதன்மைச் செயலா் செல்வி.அபூா்வா, சேலம் திருமேனி எா்த் மூவா்ஸ் பி.லிட், சேலம் தலைவா் பி.பாலசுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.