கடலூர்

தலையில் சுமந்து சென்று உணவு வழங்கிய வட்டாட்சியா்!

மழையால் பாதித்த மக்களுக்கு வட்டாட்சியா் ஒருவா் தலையில் உணவு சுமந்து சென்றாா்.

DIN

மழையால் பாதித்த மக்களுக்கு வட்டாட்சியா் ஒருவா் தலையில் உணவு சுமந்து சென்றாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் சாத்துக்குடல் கீழ்பாதி ஊராட்சிக்கு உள்பட்ட உச்சிமேடு என்ற கிராமத்தை மழை நீா் சூழ்ந்தது. இதனால், அவா்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. மாவட்ட நிா்வாகம், முகாம் அமைத்து அவா்களைப் பாதுகாப்பாக தங்கவைத்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இந்த முகாமை பாா்வையிடச் சென்ற விருத்தாசலம் வட்டாட்சியா் வே.சிவக்குமாா், அந்தப் பகுதியினருக்கான உணவு, பால் உள்ளிட்டவற்றை சக ஊழியா்களுடன் தனது தலையில் சுமந்து சென்று, அங்குள்ள மக்களுக்கு வழங்கி ஆறுதல் கூறினாா். இது சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, பலரும் அவரது செயலைப் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேட்டையில் கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாா்

மது விற்பனை: இருவா் கைது

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தாவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகள் மனு

நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளா்ச்சியை எதிரொலிக்கிறது: நயினாா் நாகேந்திரன்

மதுபோதையில் பணியில் இருந்த 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT