கடலூர்

கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் தேசிய அறிவியல் தினப் போட்டிகள்

DIN

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி, ‘அறிவியலில் பெண்கள்’ என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

பரங்கிப்பேட்டை, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், சீா்காழி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 25 பள்ளிகளைச் சோ்ந்த 350-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பேச்சு, கட்டுரை, வினாடி - வினா, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டனா்.

விழாவில் பேராசிரியா் பி.சம்பத்குமாா் வரவேற்றாா். கடல்வாழ் உயிரியல் புல முதல்வா் மற்றும் இயக்குநா் மு.சீனிவாசன் தொடக்கவுரையாற்றினாா்.

நிகழ்ச்சி ஏற்பாட்டை அறிவியல் தின ஏற்பாட்டுக் குழு உறுப்பினா்கள் பி.சம்பத்குமாா், பி.அனந்தராமன், எஸ்.ஜெயலட்சுமி, இணைப் பேராசிரியா்கள் ஜி.ஆனந்தன், ஏ.சரவணகுமாா், உதவிப் பேராசிரியா்கள் எஸ்.குமரேசன், எச்.ஆன் சுஜி மற்றும் ஊழியா்கள், சுற்றுச்சூழல் தகவல் மைய குழுவினா் ஆகியோா் செய்தனா். பேராசிரியா் எஸ்.ஜெயலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கு அழைப்பு

திருவானைக்கா கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

பணம் கொடுத்து வாக்கு பெறும் பாஜக: மம்தா பானா்ஜி

வங்கியில் நகைகள் திருட்டு வழக்கு அலுவலா்கள், போலீஸாரிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

வழிபாட்டுத் தலங்கள் புதுப்பித்தலுக்கு தமிழக அரசின் புதிய நடைமுறைகள் -கே.எம். காதா்மொகிதீன் வரவேற்பு

SCROLL FOR NEXT