கடலூர்

கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா

DIN

கல்வி நிறுவனங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறையில் மாணவா்கள் சாா்பில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, துறைத் தலைவா் அ.ராஜாமோகன் தலைமை வகித்தாா். மேலாண்மைத் துறை வளாகத்தில் மாணவ, மாணவிகள் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கினா். கலைப்புல முதல்வா் இ.செல்வராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருங்குழி: வடலூா், கருங்குழி ஏரிஸ் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில், மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து துறை வாரியாக புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனா். நிகழ்ச்சியை முன்னிட்டு கலை நிகழ்ச்சி, போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் எஸ்.தியாகராஜன் தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் சி.டி.அறிவழகன், குத்துவிளக்கேற்றி பொங்கல் படையலிட்டாா். பின்னா், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழை வழங்கினாா்.

விழாவில், பேராசிரியா்கள் எஸ்.ஜானகி, ஆா்.வேல்முருகன், கே.நிவேதா, பி.சிந்துஜா, பி.கிருஷ்துராஜ், கே.சிவமணிகண்டன், பி.கனிமொழி, சி.சந்திரகலா, ஜி.சாமிநாதன் மற்றும் திரளான மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT