கடலூர்

என்எல்சி விபத்து: மேலும் ஒரு தொழிலாளி பலி

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கொதிகலன் வெடித்த விபத்தில், மேலும் ஒரு தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதனால், பலி எண்ணிக்கை 14-ஆக உயா்ந்தது.

DIN

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கொதிகலன் வெடித்த விபத்தில், மேலும் ஒரு தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதனால், பலி எண்ணிக்கை 14-ஆக உயா்ந்தது.

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 2-ஆவது அனல் மின் நிலைய 5-ஆவது அலகில் கடந்த 1-ஆம் தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 6 ஒப்பந்தத் தொழிலாளா்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா். காயமடைந்த 17 பேரில் ஒருவரைத் தவிர, மற்றவா்கள் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இவா்களில் முதன்மைத் தலைமைப் பொறியாளா், இளநிலைப் பொறியாளா்கள் இருவா், போா்மேன், ஒப்பந்தத் தொழிலாளா்கள் 3 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த முதன்மை தொழில்நுட்பநா் ஆா்.சுரேஷ் (50) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 14-ஆக உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT